Wednesday, February 19, 2014

ஆசை

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்

மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.
ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது. ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது
உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மை யான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்
ரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.
ஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்
பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.
அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
இனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.
மிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.
முக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. இதனால் இவற்றை, தாராளமாக உண்டு முயற்சி செய்து பார்க்கலாம்

அத்திமரத்தின் மருத்துவ குணங்கள்

மிகச்சிறந்த மரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் மரங்களில் அத்திமரமும் ஓன்று. இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில் சுக்கிர கிரகத்தின்  மரமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. அத்திமரங்களில் பல வகைகள் உண்டு. அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என மூன்று வகை மரங்கள்  உண்டு. அத்திமரம் அனைத்து வகையிலும் மருத்துவகுணம் உடையது. அத்திபழத்தை அப்படியே சாப்பிடமுடியாது. 

பழத்துக்குள் சிறுசிறு பூச்சிகள் இருக்கும். இதனால் பழத்தை பதப்படுத்தி சாப்பிடவேண்டும். மரத்தின் வேர் பட்டை, இலை, பாலகாய், பழம் என  அனைத்துமே மனிதன் நலமாக வாழ்வதற்கு தேவையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அத்தி இலை பித்த நோய்களை குணப்படுத்தும்.  இந்த இலைகளைத் தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பித்த நோய் தொடர்பான அனைத்தும் குணமாகும். வாய்புண், ஈறுகளில் சீழ்வடிதல்,  உடலில் ரத்தம், வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். 

அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும். அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்தி பழம், அத்தி பிஞ்சு, அத்திக்காய், ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் மூலம், ரத்த மூலம், வயிற்று கடுப்பு,  சீதபேதி, வெள்ளை படுதல்,  வாதநோய்கள், மூட்டு வலி சர்க்கரை நோய் தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்தும் அத்திக்காய் சாற்றை குடித்தால் சிறுநீரகக்கோளாறுகள்  நீங்கும். அத்தி மரத்தின் வேரில் இருந்து எடுக்கக்கூடிய 'கள்' சர்க்கரை மற்றும் மூலநோய்களை கட்டுப்படுத்தும். 

மரத்தின் இலையை இரவில் ஊறவைத்து காலையில் குடிநீரில் கலந்து குடித்தால் வாதநோய், மூட்டுவலி குணமாகும். மனிதர்களை நலமுடன்  வாழவைக்கும் அத்தி மரம் இந்து கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் அதவம்(அத்தி  மரம்) என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர்  சுபபிரியா. இவர் நீரிழிவுநோய் பற்றியும், நோய்தடுப்பு முறைகள் பற்றியும் தரும் ஆலாசனைகளை பார்ப்போம். பொதுவாக இந்த தலைமுறையினரை  அதிகமாக பாதிக்கும் நோயாக நீரிழிவுநோய் உள்ளது. இதற்கு காரணம் சர்க்கரைநோய் குறித்து நமக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததே. 

நோயை கட்டுபடுத்தும் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் கேட்பதோடு சரி அதை பின்பற்றுவது கிடையாது. சர்க்கரைநோய்க்கு  முக்கியகாரணம் அவசர உணவு. அதாவது பீசா, பர்கர், மேகி போன்ற உணவை தேடிச்செல்கிறோம். உலகளவில் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட  நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு முறை சர்க்கரைநோய் வந்தால் அதற்காக வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்.

சத்தான கேழ்வரகு, காய்கறிகள், போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோயை தவிர்க்கலாம். தற்போது உள்ள அறிவியல்  முன்னேற்றத்தால் சர்க்கரை இன்சூலின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூங்கபோகும் போது கால்களை பார்க்க வேண்டும். அப்போது வழக்கத்துக்கு மாறாக  கால்கள் வீக்கமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சர்க்கரைநோயால் கால் இழப்பு அதிகரித்து வருகிறது. 

திடீர் உடல் பருமன் குறைவு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, பிறப்பு உறுப்பில் புண், அரிப்பு ஏற்படுதல் சர்க்கரை நோய்க்கு அறிகுறியாகும். சர்க்கரை  நோய்க்கு மருந்து உட்கொள்வதை தவிர்த்து இன்சூலின் எடுத்து கொள்ளலாம். இதில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆரோக்கியமான உணவு வகைகள்,  காய்கறிகள் உட்கொண்டால் எந்த நோயும் நம்மை தாக்காது ஆரோக்கியமாக வாழலாம்.

பாட்டி வைத்தியம்

ஊறவைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தயிரில் கலந்து 3வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். வயிற்று கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல்  அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயும் கலந்து குடித்தால் சிறிது நேரத்தில் குணமாகிவிடும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம்  செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 

வெற்றிலை சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெண்டைக்காயை அடிக்கடி சேர்த்து  வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தை செம்மைப்படுத்தும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மாதுளம் பழச் சாறுடன், தேன் கலந்து  சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தமடையும். முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டை யில்  தடவிக்கொண்டால் இருமல் நிற்கும். வில்வப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும். 

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சருமம் தங்கம் போல் மின்னும். பாசிப்பயிறு மாவை  வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு பிரச்னை சரியாகும். கிராம்பு, கற்பூரம், ஓமம் ஆகியவற்றை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து  பொடி செய்து வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து வாய் கொப்பளிக்க, ஈறு வீக்கம் குறையும். அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து  அரைத்து படர்தாமரையில் பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். 

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீரையும் சந்தனத்தையும் அரைத்து முகத்தில் தடவ, சருமம் பொலிவு பெறும். கிராம்பை வெற்றிலையுடன்  சேர்த்துப் போட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.  வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக  சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.  வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில்  சாப்பிட உடல் எடை குறையும்.

மஞ்சள் தூளை நெய்யுடன் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் இருமல் நிற்கும். கிராம்பு பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள்  பலமாகும். பேரிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு  இருமல் குணமாகும்.